மனநலம் பாதிக்கப்பட்ட பெண் யானை மிதித்து பலி

தாளவாடியில் யானை மிதித்து பலியான மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை அடக்க செய்த இளைஞர்கள் மன்றத்தினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதியில் மன நலம் பாதிக்கபட்ட பெண் ஒருவர் யானை மிதித்து பலியானார். போலீசார் விசாரனையில், அவர் சத்தியமங்கலத்ததை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அந்த மன நலம் பாதிக்கபட்ட பெண்ணின் உடலை வாங்குவதற்க்கு உறவினர்கள் என யாரும் முன் வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண்ணின் சடலத்தை விடியல் இளைஞர் மன்றத்தினர் மற்றும் தாளவாடி சமூக ஆர்வலர்கள் அந்த பெண்ணின் உடலை எடுத்து சென்றனர். சம்பிரதாய முறைப்படி உடலை நல்லடக்கம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version