பேஸ்புக் மூலம் பெண்களிடம் பழகி ஆபாசப் படம் எடுத்த முக்கிய குற்றவாளி கைது

பொள்ளாச்சியில் பேஸ்புக் மூலம் பெண்களிடம் பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பேஸ்புக் மூலம் பெண்களிடம் பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், சபரி ராஜன் ஆகிய 4 பேர் மீது பொள்ளாச்சி கிழக்கு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இதில் 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான திருநாவுகரசு என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசு பேசுவது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. அதில், இந்த விவாகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் போலீசில் ஆஜராக உள்ளதாக தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, குற்றவாளி திருநாவுகரசு மீண்டும் தனது நண்பர்களுடன் மதுபான விடுதியில் நடனமாடுவது போன்ற வீடியோ வாட்ஸ்அப்பில் வெளிவந்தது. இந்தநிலையில், தலைமறைமாக இருந்த திருநாவுக்கரசை தனிப்படை போலீசார் மகினாம்பட்டு எனும் இடத்தில் கைது செய்தனர்.

Exit mobile version