மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச லட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, நாள்தோறும் பக்தர்கள் அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில், பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி மூலம், பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

Exit mobile version