லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் சோதனை

லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில், இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மார்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனையை துவக்கினர். கோவையில் 22 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. மேலும், கொல்கத்தா, மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோதனைகள் நடைபெறுகிறது. முதல் நாள் சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருவல்லிக்கேணி அலுவலகத்தில் சோதனை நிறைவு பெற்ற நிலையில், போயஸ் தோட்டத்தில் உள்ள அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Exit mobile version