தயாரிப்பாளர்கள் சங்க கட்டிடத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் – விஷால் மீது உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிதி மோசடி உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெறுவதாக கூறி சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டு உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக  அச்சங்க தலைவர் விஷால் மீது சங்க உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த முறைகேடுகள் தொடர்பாக விஷால் விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி, சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Exit mobile version