எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் தரமானது

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில், மண்ணானது நிலைத்தன்மை உடையதாக இருப்பதாகவும் 6 மாடிகளுக்கும் மேலாக கட்டடம் கட்டலாம் எனவும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ளது. இது குறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டது. 200 ஏக்கரில் அமைய உள்ள இந்த மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகளுடன் நவீன சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன.

இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய நிதிக்குழுவினரும் ஜப்பான் நிதிக்குழுவினரும் தோப்பூரில் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் மருத்துவமனை அமையும் இடத்தில் உள்ள நிலப்பகுதி தரமானது என நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட இடத்தில் 6 மாடிகளுக்கு மேலாக கட்டிடம் கட்டலாம் எனவும் சான்று வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version