துரோகிகளுக்கு பாடம் புகட்டும் தேர்தல் இது-முதலமைச்சர்

திருவள்ளூர் மக்களவை தனித் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர்.வேணுகோபால் மற்றும் பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் வைத்தியநாதன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.

பூந்தமல்லியில் சாலையின் இருபுறமும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மத்தியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.அப்போது பேசிய அவர், அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்களால் இடைத்தேர்தல் வர நேரிட்டது என்றார்.துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும் பாடம் புகட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்க வேண்டும் என்றார்.

Exit mobile version