சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூலை 20 ஆம் தேதியுடன் நிறைவு

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை ஜூலை20ம் யுடன் முடிக்க சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜூலை 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து சட்டசபை கூட்டத் தொடரை விரைவாக முடிக்க சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜூலை 20 ஆம் தேதியுடன் முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேரவையை இரவு வரை நடத்தி மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version