தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கீடு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடி சதமடித்த நிலையில், மழையின் காரணமாக முதல் நாள் ஆட்டம் முன் கூட்டியே முடிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 இருபது ஓவர் தொடர், 3 டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த இருபது ஓவர் தொடர் சமனில் முடிந்தது. அடுத்து தொடங்கிய டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்றுத் தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, ராஞ்சியில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரராக களம் இறங்கிய மயங்க் அகர்வால்,10 ரன்னிலும், இதனையடுத்து களம் இறங்கிய புஜாரா ரன் ஏதும் எடுக்காமலும் ரபடா பந்து வீச்சில், அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனையடுத்து களம் இறங்கிய கேப்டன் கோலி 12 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

Exit mobile version