ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வரும் 31ம் தேதி கடைசி நாள்: வருமான வரித்துறை

ஆதாருடன் பான் எண்ணை கட்டாயம் இணைக்க வரும் 31ம் தேதி கடைசி நாள் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் 12 இலக்க அடையாள எண் கொண்ட ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. இது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படுகிறது. இது வங்கிக்கணக்கு தொடங்குவது உட்பட எல்லா அரசு திட்டங்களிலும், மானியங்களை பெறுவதிலும் ஆவணமாக திகழ்கிறது. இந்த ஆதார் எண்ணை வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணான பான் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை கூறுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் பான் எண் பெற்றுள்ள அனைவரும், ஆதாருடன் தங்களது பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என்றும், அதற்கு வருகிற 31ம் தேதி கடைசி நாள் எனவும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

Exit mobile version