இன்று நடைபெறும் இந்தியா – இலங்கை இடையேயான கடைசி 20 ஓவர் போட்டி

இந்தியா – இலங்கை இடையேயான 3 வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி புனேவில் இன்று நடைபெறுகிறது.

லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. கவுகாத்தியில் நடைபெற இருந்த முதலாவது டி 20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தூரில் நடைபெற்ற 2 வது 20 ஓவர் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னைலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3 வது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி புனேவில் இன்று நடைபெறுகிறது. பேட்டிங்கில் வலுவாக காணப்படும் இந்திய அணி சொந்த மண்ணில் தொடரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல், தொடரை இழக்காமல் இருக்க இந்த போட்டியில் வெற்றி பெற்று சமன் செய்ய இலங்கை அணியும் முனைப்பு காட்டி வருகிறது. ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.

Exit mobile version