தென்னாப்பிரிக்கா அணியுடனான கடைசி 20 ஓவர் போட்டி: இந்திய அணி பேட்டிங்

பெங்களூருவில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. தர்மசாலாவில் நடக்க இருந்த முதலாவது 20 ஓவர் போட்டி பலத்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. மொஹாலியில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி வீரர்களும், போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இதனால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு பெரும் விறுவிறுப்பாக அமையும். 

40 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட சின்னசாமி ஸ்டேடியத்தில் இதுவரை 6 இருபது ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் 4-ல் விளையாடியுள்ள இந்திய அணி 2-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது.

Exit mobile version