கொடநாடு வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு

கொடநாடு வழக்கில் தங்களுக்கு சாதகமாக சாட்சியம் அளிக்க வேண்டும் என மிரட்டல்கள் வருவதால், மேல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சட்சிகளின் ஒருவரான ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறார்.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி, வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், குற்றம் சாட்டப்பட்டுள்ள கனகராஜை தனக்குத் தெரியும் எனவும், வழக்கு தொடர்பாக மிரட்டல்கள் வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிடுவதுடன், மேல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொடநாடு வழக்கு விசாரணை ஏற்கெனவே முடியும் தருவாயில் உள்ள நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மேல் விசாரணைக்கு திமுக முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version