தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முன்னிலையில் அரங்கேறிய கொலை

தெலுங்கானா மாநிலம், ரெட்டி மாவட்டத்தில் பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பதன் செருவு அருகே உள்ள ருத்ராரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென ஒருவர் ஓடி வந்து ஒருவரை நடுரோட்டில் வைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்தார். சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் கொலை சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தனர். வெட்டிய நபர் சரமாரியாக வெட்டிய பின்பு அங்கிருந்து எதிர் திசையில் உள்ள சாலைக்குச் சென்று இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றார். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையாளி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் கொலையானவர் மகபூப் என்பதும் கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Exit mobile version