வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளிகள்

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கொலையாளிகளின் பையை காவல்துறையினர் சோதனை செய்ததில், ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாம் நாடு இந்தியா என எழுதப்பட்ட பல்வேறு குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

களியக்காவிளை கொலை வழக்கில் கைதான இரு கொலையாளிகளிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் நெய்யாற்றிகரை உட்பட பல்வேறு பகுதிகளில் நடத்திய விசாரணையில் கொலையாளிகள் ஒரு பையை அங்குள்ள ஜாபர் என்பவரிடம் கொடுத்ததாக கூறியுள்ளனர். இந்நிலையில், ஜபாரின் வீட்டில் இருந்த பையை மீட்டு சோதனையிட்டதில், கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர். மேலும், இந்தியாவானது, இஸ்லாமிய இந்தியாவாக மாறும் வரை போராடுவோம் என்றும், ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய நாடு இந்தியா என்றும் எழுதிய குறிப்பும் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version