மலைப்பாம்பை உயிருடன் பிடித்த கேரளா பெண்- வைரலாகும் வீடியோ

கேரளாவில் சுமார் 20 கிலோ எடையுள்ள மலைப்பாம்பை பெண் ஒருவர் உயிருடன் பிடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

கேரளாவை சேர்ந்த மூத்த கடற்படை அதிகாரி ஒருவரின் மனைவி தான் இந்த வீர செயலில் ஈடுபட்டவர். மழையின் காரணமாக குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்குள் மலைப்பாம்பு ஒன்று நுழைந்தது. இதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களுடன் அந்த பெண்ணும் இணைந்து தைரியமாக பிடித்துள்ளார்.

இதனை ட்விட்டரில் ஹரிந்தர் சிக்கா என்பவர் பதிவிட சில மணி நேரங்களிலேயே வைரலானது. இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதனை பார்த்து அந்த பெண்ணின் தைரியத்தை பாராட்டியுள்ளனர்.

Exit mobile version