மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கவில்லை: மத்திய அரசு

மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கவில்லை என்று, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்ய, கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த அனுமதியை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்ய, கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கியது, நீதிமன்றம் அவமதிப்பு இல்லை என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.

Exit mobile version