பரபரப்பான சூழலில் கர்நாடக சட்டசபை இன்று கூடுகிறது

குழப்பமான அரசியல் சூழலில் கர்நாடக சட்டசபை இன்று கூடுகிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த குமாரசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கர்நாடக அரசை கவிழ்க்க, பாஜக முயற்சிப்பதாக குமாரசாமியும் காங்கிரஸ் தலைவர்களும் குற்றம்சாட்டினர். இதனிடையே சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மும்பையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி பா.ஜ.க தலைவர்களுடன் பேரம் பேசியதாகவும் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. கவர்னர் வஜூபாய் வாலா துவக்க  உரையாற்றுகிறார். வரும் 8ஆம் தேதி முதலமைச்சர் குமாரசாமி 2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

Exit mobile version