சீர்காழி அருகே ரூ.41லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல்

சீர்காழி அருகே பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாத 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பட்டதையொட்டி நாடு முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுகு வந்துள்ளன. இந்நிலையில் சீர்காழி தனி தாசில்தார் இந்துமதி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சூரக்காடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் 41 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 248 கிராம் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. இந்த நகைகள் அனைத்தும் புதுச்சேரியில் உள்ள நகை கடை ஒன்றில் இருந்து காரைக்காலில் உள்ள அதே கடையின் மற்றொரு கிளைக்கு கொண்டு செல்வதாக கூறப்படுகிறது. எனினும் நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அவற்றை பறக்கும் படையினர் கைப்பற்றினர்.

Exit mobile version