மேகதாது விவகாரத்தை இந்தியாவின் பிரச்சினையாக கருத வேண்டும் – கவிஞர் வைரமுத்து

மேகதாது விவகாரத்தை இந்தியாவின் பிரச்சினையாக கருத வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில், ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சை அடுத்த வல்லத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரத்து 8 ஆடுகளை வழங்கினார்.

இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், மின் ஊழியர்கள் தங்களது முழு சக்தியையும் பயன்படுத்தி பணியில் ஈடுபட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.

கர்நாடகாவில் அணை கட்டுவது இரண்டு மாநில பிரச்சனை இல்லை என்றும் இது இந்திய பிரச்சனையாக கருத வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Exit mobile version