சென்னையில் அரசு அதிகாரிகளை மிரட்டி வந்த பிரபல இடைத்தரகர் நடராஜன் என்பவரை செம்பியம் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அரசின் இலவச சேவைகளையும், திட்டங்களையும் எளிதில் பெற்று தருவதாக கூறி, சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த நடராஜன் என்பவர் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து வந்ததாக புகார் கூறப்பட்டு வந்தது. அது மட்டுமின்றி, அரசு அதிகாரிகளையும் அவர் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வட்டாட்சியர் சைலேந்திரன், செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் செம்பியம் காவல் ஆய்வாளர் ஜெகன், வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த நடராஜனை கைது செய்தார். எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடராஜன் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.