நீர்வழிபாதைகளை தூர்வாரி, உறிஞ்சும் குழு அமைக்கும் பணி தீவிரம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நீர்வழிபாதைகளை தூர் வாரி, உறிஞ்சும் குழு அமைக்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சத்தை போக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் கிராம பகுதியில் நீர் வரத்து கால்வாய்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் 110 பெண்களை கொண்டு கண்மாய்களுக்கு வரும் நீர்வழிபாதைகள் முழுவதும் தூர் வாரி, உறிஞ்சும் குழி அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. இதில், ஏராளமான பெண்கள் ஈடுபட்டுள்ளனர்

Exit mobile version