வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்

கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டதால், வெளிநாடுகளில் சிக்கிய இந்தியவர்கள் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வந்தே பாரத் என்னும் திட்டம் மூலம், கடந்த 7 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், அமெரிக்காவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம், முதற்கட்டமாக சான்பிரான்சிஸ்கோவில் இருந்து 225 இந்தியர்கள், தாயகம் அழைத்து வரப்படுகிறார்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

Exit mobile version