கச்சமங்கலம் தடுப்பணை சீரமைக்கும் பணி தீவிரம்

கல்லணை அருகே உள்ள கச்சமங்கலம் தடுப்பணை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாமன்னன் கரிகாலன் சோழன் கட்டிய கல்லணை இன்றளவும் கம்பீரமாக உள்ளது. கல்லணைக்கு அருகே கச்சமங்கலம் கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே அணை ஒன்று உள்ளது. வெள்ளாற்றின் குறுக்கே 600 அடி நீலத்தில் 9 அடி உயரத்தில் இந்த அணை உள்ளது. இந்தநிலையில், தமிழக அரசின் உத்தரவின்படி தடுப்பணையில் கசியும் பகுதியை நவீன முறையில் சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 14 கோடி ரூபாய் மதிப்பில் அணையின் உயரத்தை அதிகரித்தல், மதகுகள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

Exit mobile version