திருப்பரங்குன்றத்தில் சைப்பூசத் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றத்தில் தைப்பூசத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் முனைப்புடன் நடைபெற்று வருகின்றன.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா வரும் தைப்பூசத்தன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு தெப்ப குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி முனைப்புடன் நடைபெற்று வருகிறது. மேலும் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள சுவர்களில் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவு பெறும் வகையிலான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

Exit mobile version