விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் சிலை தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சுற்றுச்சூழல் மாசு இல்லாத, காகித கூழ், கிழங்கு மாவு பயன்படுத்தி பல விதமான விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இங்கு உருவாக்கப்படும் சிலைகள் வாங்கி செல்ல கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மக்கள் வருவதாக சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். விநாயகர் சதுர்த்தி நெருங்கி வருவதால் சிலை தயாரிப்பு பணிகள் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version