நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், டெல்லி விமான நிலையத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் விமான நிலையங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேற்றிரவு ஆய்வு மேற்கொண்டார். பயணிகளுக்கு செய்யப்படும் பரிசோதனையை பார்வையிட்ட அவர், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவக் குழுவினரிடம் கேட்டறிந்தார்.

Exit mobile version