தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணியில் 9ஆயிரம் பேர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தாமிரபரணி ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணிகளைத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தொடங்கி வைத்தார். தாமிரபரணி ஆற்றின் 60இடங்களில் சுத்தப்படுத்தும் பணி மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என 9 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் 185 குளங்களில் குடிமராமத்துப் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்.

Exit mobile version