புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதியை தேடும் பணி தீவிரம்

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதியை ராணுவம் தீவிரமாக தேடி வருகிறது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த கொடூர தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஜெய்ஸ்- இ – முகமது அமைப்பை சேர்ந்த அகமது தாரின் என்ற தீவிரவாதி இந்த தாக்குதலை நடத்தியுள்ளான். இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு அப்துல் ரஷீத் கசி என்ற தீவிரவாதி மூளையாக செயல்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவனை பிடிக்க ராணுவம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடுமையான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. கடந்த 9ம் தேதி பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதி ரஷீத் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்து தப்பிச்சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version