கொழும்பு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இலங்கையில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட இரண்டு வாகனங்கள் கொழும்பு நகரில் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து கொழும்பு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் கொழும்பில் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட வேன் மற்றும் கார் வலம் வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து இலங்கையிலுள்ள அனைத்து காவல் நிலையங்களையும் உஷார் படுத்தும்படி கொழும்பு காவல் பொறுப்பாளார் உத்தரவிட்டுள்ளதாக அரசு செய்தி தொடர்பாளர் ருவண் குண்சேகர தெரிவித்துள்ளார். கொழும்பு நகரில் அனைத்து வாகங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. சந்தேகத்திற்கிடமான இடங்களில் பொது மக்கள் கொண்டு வரும் அனைத்து பைகளும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் ஆலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Exit mobile version