குப்பை கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி தீவிரம்

சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் 42 லட்சம் ரூபாய் செலவில் குப்பை கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இங்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால், குப்பைகள் அதிக அளவில் சேருகிறது. இவற்றின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தின் அடிப்படையில் அதற்கான கட்டமைப்பு பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. குப்பை கழிவில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் ஏற்காடு ஏரியை ஒட்டியுள்ள சாலை மற்றும் அண்ணா பூங்கா சாலைகளில் உள்ள தெரு விளக்குகளுக்கு பயன்டுத்தவதாக ஆணையாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக 42 லட்ச ரூபாய் செலவிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Exit mobile version