ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது மற்றும் 4 வது டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில், ஹர்திக் பாண்ட்யா, மயாங்க் அகர்வால்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது மற்றும் 4 வது டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில், ஹர்திக் பாண்ட்யா, மயாங்க் அகர்வால் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், பெர்த்தில் நடைபெற்று வரும் 2 வது டெஸ்ட் நாளை முடிவடைய உள்ளது. இந்தநிலையில், 3 வது டெஸ்ட் வரும் 26 ஆம் தேதி தொடங்க உள்ளது. எனவே, எஞ்சியுள்ள 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஹர்திக் பாண்டியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பயிற்சியின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ப்ரித்வி ஷா தொடரில் இருந்து விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக மயாங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Exit mobile version