ஏற்றத்துடன் தொடங்கிய இந்தியப் பங்குச்சந்தை

முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளில் முதலீடு செய்ததால் இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்றைய வணிகம் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் இன்று தொடக்கம் முதலே உயர்ந்து வந்தது. ஒன்பதே முக்கால் மணியளவில் சென்செக்ஸ் 212 புள்ளிகள் உயர்ந்து 40 ஆயிரத்து 624 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 42 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 952 ஆக இருந்தது. எஸ்பேங்க், டாட்டா மோட்டார்ஸ், இந்துஸ்தான் அலுமினியம் கம்பெனி, வேதாந்தா ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு 3 விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்தது. முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியதே பங்குச்சந்தை உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

Exit mobile version