பாகிஸ்தான் மீதான தக்க நடவடிக்கையை இந்திய அரசாங்கம் தொடங்கியுள்ளது

ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் மீதான தக்க நடவடிக்கையை இந்திய அரசாங்கம் தொடங்கியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியான அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவச்சந்திரனின் வீட்டுக்குச் சென்றார் . அங்கு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தாம் சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version