எல்லையில் இந்திய ராணுவம் முழு உஷார் நிலை

எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை இந்திய விமானங்கள் தாக்கி அழித்தன. இன்று அதிகாலை 3.30 மணிக்கு 12 மிராஜ் 2 ஆயிரம் ரக விமானங்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டன. இந்திய விமான படை நிகழ்த்திய தாக்குதலில் 300 தீவிரவாதிகள் வரை பலியாகியிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இந்திய பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. எல்லை பகுதி முழுவதும் ராணுவம், உஷார் நிலையில் உள்ளது. மேலும் விமானப்படையும் உச்ச கட்ட உஷார் நிலையில் இருக்க அறிவுருத்தப்பட்டுள்ளது.

Exit mobile version