இந்தியா- பாகிஸ்தான் பிரச்சனை சமுகமாக தீரும்: அதிபர் டிரம்ப்

இந்தியா பாகிஸ்தான் இடையேயான பிரச்சனை சுமுகமாக தீரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்திய விமான படை அதிகாரி அபிநந்தன் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது நிலவரத்தை மேலும் மோசமாக்கியுள்ளது. இந்த் நிலையில், வியட்நாமில் வட கொரிய அதிபர் கிம் உடனான சந்திப்புக்கு பின் செய்தியாளரிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து பதற்றம் தணிவது தொடர்பான அறிகுறிகளுடன் கூடிய செய்திகள் வருவதாக குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புவதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

Exit mobile version