வெளியூர் மீனவர்களை வெளியேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

ராமநாதபுரம் அருகே வெளியூர் மீனவர்களை வெளியேற்ற வலியுறுத்தி, 5-வது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே, கோயில்வாடி கடற்கரையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வாரம் 3 முறை தங்குதளம் அமைத்து மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் வெளியூர் மீனவர்கள் கடல் வளத்தை அழிக்கும் மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதை தடுத்துநிறுத்தக்கோரியும், தரக்குறைவாக பேசிய மீனவர்களை வெளியேற்ற வலியுறுத்தியும் 5-வது நாளாக மண்டபம் மீனவச் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மண்டபம் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் சுமார் 500-க்கும் மேற்பட்டோர், கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

Exit mobile version