கொடைக்கானலில் இனி வெயிலின் தாக்கம் மட்டும்தான் இருக்கும்

கொடைக்கானலில் இனிவரும் காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்று வான் இயற்பியல் மையம் தெரிவித்துள்ளது.

கொடைக்கானலில் ஆண்டுதோறும் குளுகுளு சீசனை அனுபவிக்கவும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கொடைக்கானலில் இனி வரும் காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்று கொடைக்கானல் வான் இயற்பியல் விஞ்ஞானி செல்வேந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version