கடும் பனிப்பொழிவால் வெற்றிலை விவசாயம் பாதிப்பு

ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக வெற்றிலை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வெற்றிலை சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. மழையின் அளவு குறைந்ததால் அதிகப்படியான விவசாயிகள் வெற்றிலை விவசாயத்தை கைவிட்டு வேறு வேலைக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், பெத்தநாயக்கன்பாளையம், கடம்பூர், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த அளவு நீரை பயன்படுத்தி வெற்றிலை விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது இந்த பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் வெற்றிலை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக வெற்றிலை வீணாகி போவதால், தாங்கள் கடும் இன்னலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version