மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு வருவாய் தீர்வாயம் மூலம், மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் தங்கவேல் தலைமையில் 11 நாட்கள் நடந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 2 ஆயிரத்து 518 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தின் கடைசி நாளில் 72 பேருக்கு பட்டா மாறுதலும் 64 பேருக்கு முதியோர் உதவித்தொகையும், ஐந்து பேருக்கு குடும்ப அட்டையும் வழங்கப்பட்டன.

மதுராந்தகம் பகுதியிலுள்ள கிராமங்களுக்கு வருவாய் தீர்வாயம் மூலம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பட்டா மாறுதல், முதியோர் உதவி தொகை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுக்காணப்பட்டன.

 

Exit mobile version