கணவர் இறந்த சோகத்தில் அரசு செவிலியர் தனது பெண் குழந்தையுடன் தற்கொலை

செஞ்சி அருகே கணவர் இறந்த சோகத்தில் அரசு செவிலியர் தனது பெண் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நேமூர் பகுதியை சேர்ந்த சரசு என்பவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கார்த்திகேயன் என்பவருடன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கார்த்திகேயன் சென்னையில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், வேலை செய்த இடத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 6 மாதத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த சரசு 6 மாதமாக விடுப்பு எடுத்து பணிக்கு செல்லாமல் தன் குழந்தையுடன் தாய் வீட்டிலே வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சரசு, தனது குழந்தையுடன் அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version