வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலையைப் பராமரிக்க அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. ஸ்டெர்லைட் ஆலையைப் பராமரிக்க ஆட்களை அனுப்ப அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆலையை மூட பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரியும் வேதாந்தா நிறுவனம் கோரி இருந்தது.    நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல் குமார் அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்க கோரும் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து உத்தரவிட்டனர்.  இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் சுற்றுச்சூழல்துறை மார்ச் 27 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version