பாரதிராஜா தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குனர் பாரதிராஜா தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து கடவுள்கள் இறக்குமதி கடவுள்கள் என பேசியதாகவும், ஆண்டாள் கட்டுரை சர்ச்சையில், வைரமுத்துவுக்கு ஆதரவாக வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், இயக்குனர் பாரதிராஜா மீது, இந்து அமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டு, சென்னை வடபழனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரி பாரதிராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, பாரதிராஜா வழக்கு குறித்து வடபழனி காவல் ஆய்வாளர் மற்றும் புகார்தாரர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை அடுத்த வாரத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Exit mobile version