விருதாச்சலம்-பரவளூர்ரெட்டி குப்பம் இடையே உயர்மட்ட பாலம்

கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தை அடுத்த பரவளூர் மற்றும் ரெட்டி குப்பம் இடையே உள்ள மணிமுத்தாற்றில் பாலம் அமைப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. பாலம் அமைப்பதற்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் உத்தரவின்பேரில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் நன்றி கூறினர்.

Exit mobile version