யானைகள் கூட்டத்தை படம் பிடித்து கொண்டிருந்த இளைஞர்: நடந்த விபரீதம்

கிருஷ்ணகிரி அருகே யானைகள் கூட்டத்தை படம் பிடித்து கொண்டிருந்த இளைஞர்களை யானை தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராயக்கோட்டை அருகே உள்ள லிங்கம்பட்டி மலைப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகளை அப்பகுதி இளைஞர்கள் சிலர் கைபேசியில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, கூட்டத்தை விட்டு பிரிந்து வந்த யானை ஒன்று, அவர்களை தாக்க முற்பட்டது. இதில் நூலிழையில் அந்த இளைஞர்கள் உயிர் தப்பிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை உருவாக்கி உள்ளது. இத்தகைய செயல்களில் பொதுமக்கள் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டுமென வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

Exit mobile version