அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சில நாட்களாக , அக்னி நட்சத்திரம் முடிந்ததும், கடுமையாக வெப்பம் நிலவி வந்தது.  இந்நிலையில், பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. அவிநாசி, பழங்கரை, ஆட்டையம்பாளையம், காசிகவுண்டன்புதூர், வேலாயுதம்பாளையம், சூளை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை பொழிந்தது.  வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Exit mobile version