கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலுக்கான வழிகாட்டுதல்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாசக் கோளாறு பிரச்னை உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும் என்றும், வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வந்த நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version