பள்ளி தலைமை ஆசிரியருக்கு ரூ1.50 லட்சத்தில் இருசக்கர வாகனத்தை பரிசாக அளித்த கிராம மக்கள்

பள்ளி தலைமை ஆசிரியரின் சேவையைப் பாராட்டி கிராம மக்கள் ஒன்றரை லட்சம் ரூபாயில் இருசக்கர வாகனத்தை பரிசாக அளித்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த கொட்டக்குடியில் ஆர்.சி நடுநிலைப் பள்ளி 8ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1991 ஆண்டு முதல் இளநிலை ஆசிரியராக வேதமுத்து பணியாற்றி வந்துள்ளார். பின்னர், இதே பள்ளியில் பள்ளியில் 5 ஆண்டுகள் ஆசிரியராகவும், இதையடுத்து தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ஒரே பள்ளியில் 27 ஆண்டுகள் பணிபுரிந்த ஆசிரியர் வேதமுத்து, தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவர் சிறந்த ஆசிரியர் பணியை சிறப்பாக செய்து, பல மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து வைத்துள்ளார். இவரை கவுரவிக்கும் விதமாக பொதுமக்கள் சார்பாக ஒன்றரை லட்சம் ரூபாயில், இருசக்கர வாகனத்தை பரிசாக வழங்கினர்.

Exit mobile version