மேகேதாட்டு அணை தொடர்பாக விளக்கம் அளிக்க நிதின் கட்கரிக்கு மாநிலங்களவை தலைவர் உத்தரவு

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு மாநிலங்களவை தலைவர் உத்தரவிட்டுள்ளார். மாநிலங்களவை இன்று கூடியதும் மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

கேள்வி நேரத்தின்போது பேசிய மாநிலங்களவை துணை சபாநாயகர் ஹரிவன்ஷ், மேகேதாட்டு பிரச்சினையில் அவைத் தலைவர் மிகவும் அக்கறை காட்டுவதாகவும், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சருக்கு இது தொடர்பாக பேச அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் விஜய் கோயல் பேசும்போது, இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விளக்கமளிக்க நிதின் கட்கரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Exit mobile version