வங்கி மேலாளர் போல் நடித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அடுத்த செல்லங்கோணத்தை சேர்ந்தவர் எட்வின் லாரன்ஸ் ராஜா. இவருக்கும் திருவனந்தபுரத்தை சேர்ந்த கவிதா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தன்னை வங்கி மேலாளர் என அறிமுகம் செய்துக் கொண்ட எட்வின், தனது வங்கியில் 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதற்காக 5 லட்சம் ரூபாயை கவிதாவிடம் இருந்து அவர் பெற்றுள்ளார். பல மாதங்கள் கடந்த நிலையிலும் லோன் கிடைக்காததால் சந்தேகமடைந்த கவிதா, கடந்த 13ஆம் தேதி எட்வினிடம் நேரில் சென்று விசாரித்துள்ளார். நாகர்கோவில் வங்கி கிளையில் பணம் உள்ளதாக கூறி, கவிதாவை காரில் அழைத்துச் சென்ற எட்வின், அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் எட்வினை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி பல நபர்களை எட்வின் ஏமாற்றி பணம் பறித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்.

Exit mobile version